சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி த.பெ.தி.க., வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டம்

வர்ணாசாரத்தையும், சாதி வேறுபாட்டையும் பள்ளி மாணவர்கள் மனதில் புகுத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : வர்ணாசாரத்தையும், சாதி வேறுபாட்டையும் பள்ளி மாணவர்கள் மனதில் புகுத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை தெற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வர்ணாசாரத்தையும், சாதி வேறுபாட்டையும் பள்ளி மாணவர்கள் மனதில் புகுத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கு.ராமகிருட்டிணன் கலந்து கொண்டார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தொடர்ந்து சாதி, மத வேறுபாடுகளையும் விஷ கருத்துகளையும் மாணவர்களிடையே விதைக்கின்ற பாடத்திட்டங்களையும், கேள்விகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி தாளில் வர்ணாசரமத்தில் இழிவான சாதி, பிராமணர்கள், சத்திரியர்கள், சூத்திரர்கள் என வினா எழுப்பப்பட்டு இதில் இழிவானவர்கள் யார் என கேட்கப்பட்டிருப்பது ஜாதி வேறுபாட்டை குழந்தைகளின் மனதில் புகுத்தும் விதமாக கேட்கப்பட்டு இருப்பது மாணவர் பருவத்திலேயே ஜாதிய வன்கொடுமையைத் தூண்டும் விதமாக அமைத்திட வழிவகுத்துவிடும். 

கடந்த காலங்களிலும் இதுபோன்று இழிவாக எழுதியுள்ளது. அதனை எதிர்த்து அந்த சமூகத்தினர் போராடி வருகின்றனர். அம்பேத்கரை நேரு சாட்டையால் அடிப்பது போல சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஒரு படத்தை வெளியிட்டு அதறக்கான காரணத்தையும் விளக்கி உள்ளனர். அதில், அம்பேத்கர் எழுதிய சட்டம் தவறாக இருப்பதாகவும், அதற்காக நேரு சவுக்கால் அடிப்பது போல படத்தை வெளியிட்டு இருப்பது கண்டனத்திற்கு உரியது. இவை அனைத்தும் தலைவர்களையும், சமூகத்தையும் இழிவுப்படுத்தி நாட்டை கூறுபோட மத்தியில் ஆளும் பா.ஜ.க. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வர்ணாசரம திட்ட கொள்கைகளை புகுத்தும் இந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற விஷ கருத்துகள் பரப்புகின்ற பள்ளிகளை மூட வேண்டும். புதிதாக தமிழகத்தில் சி.பி.எஸ்.இ பள்ளிகள் துவங்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...