மது போதையில் பிரச்சனை : செங்கல் சூலை தொழிலாளி படுகொலை

கோவையில் மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் செங்கல் சூலையில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

கோவை: கோவையில் மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் செங்கல் சூலையில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். 

துடியலூரை அடுத்த மாங்கரை பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூலையில் வேலை செய்து வருபவர்கள் முத்துகுமார், ராஜேந்திரன், ஈஸ்வரன். இவர்கள் அதே செங்கல் சூலையில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி வருகின்றனர். இந்நிலையில், மூவரும் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்குச் சென்று மது அருந்தினர். அப்போது, மூவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 

பிரச்சனையில் ஆத்திரமடைந்த முத்துக்குமார், ராஜேந்திரனை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில், ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து, தகவலறிந்த துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....