40 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வாலிபர் கைது

திருப்பூரில் 40 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் பணம் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் 40 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் பணம் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோட்டத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். ஷெரிப் காலனி பகுதியில் நூற்பாலை நிறுவனம் நடத்தி வரும் இவர் நேற்று மாலை வெளியூர் சென்றார். அப்போது அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் குழந்தை வீட்டில் தனியாக இருந்தனர். இதை நோட்டமிட்ட ஒருவர் நள்ளிரவில் வீடு புகுந்து 40 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். இதையறிந்த ராஜேஷ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியில் இருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவா என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, கொள்ளையடித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையிலடைத்தனர்.

Newsletter

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...