பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையத்தை மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில், பொள்ளாச்சி எம்.பி. கே. ஈஸ்வரசாமி திறந்து வைத்தார்.

கோவை: கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் ஒரு புதிய அங்கன்வாடி மையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தெற்கு மண்டலம், வார்டு எண் 91-இல் உள்ள சுகுணாபுரம் மேற்கு கல்கி கார்டன் பகுதியில், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை, மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடை பொருட்களும் வழங்கப்பட்டன.



இதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம், வார்டு எண் 73-இல் உள்ள பொன்னையராஜபுரம் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மற்றொரு நியாயவிலைக் கடையும், வார்டு எண் 72-இல் உள்ள அருணாசலம் வீதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையமும் திறந்து வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.57 லட்சம் மதிப்பிலான இந்த மூன்று திட்டங்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டன.



நிகழ்ச்சியில் துணை மேயர் ரா. வெற்றிச்செல்வன், மேற்கு மண்டலத் தலைவர் தெய்வானை தமிழ்மறை, நகரமைப்புக் குழுத் தலைவர் சந்தோஷ், உதவி ஆணையர்கள் டட்சிணாமூர்த்தி (தெற்கு), நர்மதா (மேற்கு), மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...