காவல்நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு

திருப்பூரில் இடப்பிரச்சனை காரணமாக காவல்நிலையம் முன்பு ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர்: திருப்பூரில் இடப்பிரச்சனை காரணமாக காவல்நிலையம் முன்பு ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 



 

திருப்பூர் ஜே.ஜே நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யகுமார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமான 4 சென்ட் இடம் இருந்துள்ளது. இந்நிலையில், இவர் வீடு கட்டுவதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரிடம் வீட்டின் பத்திரத்தை கிரைய ஒப்பந்தம் செய்து ரூ. 7.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். சுமார் இரண்டு வருடகாலமாக வட்டி தொகை கட்டாத காரணத்தால், சூர்யகுமாரின் இடத்தை தெய்வசிகாமணி தனது பெயருக்கு மாற்றியுள்ளார். இதையறிந்த சூர்யகுமார் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது குறித்து வீரபாண்டி காவல்நிலையத்தில் பல முறை புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.



இதனால், மனமுடைந்த சூர்யகுமார், இன்று திருப்பூர் வீரபாண்டி காவல்நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். இதைக்கண்ட போலீசார் அவரை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். 

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...