காவல்நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு

திருப்பூரில் இடப்பிரச்சனை காரணமாக காவல்நிலையம் முன்பு ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர்: திருப்பூரில் இடப்பிரச்சனை காரணமாக காவல்நிலையம் முன்பு ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 



 

திருப்பூர் ஜே.ஜே நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யகுமார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமான 4 சென்ட் இடம் இருந்துள்ளது. இந்நிலையில், இவர் வீடு கட்டுவதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரிடம் வீட்டின் பத்திரத்தை கிரைய ஒப்பந்தம் செய்து ரூ. 7.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். சுமார் இரண்டு வருடகாலமாக வட்டி தொகை கட்டாத காரணத்தால், சூர்யகுமாரின் இடத்தை தெய்வசிகாமணி தனது பெயருக்கு மாற்றியுள்ளார். இதையறிந்த சூர்யகுமார் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது குறித்து வீரபாண்டி காவல்நிலையத்தில் பல முறை புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.



இதனால், மனமுடைந்த சூர்யகுமார், இன்று திருப்பூர் வீரபாண்டி காவல்நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். இதைக்கண்ட போலீசார் அவரை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். 

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...