ஆணவக் கொலைக்கு மார்தட்டும் சாதி வெறி கும்பல் : மவுனம் காக்கும் தமிழக அரசு

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி காதல் மறுப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர் உடுமலை பேட்டையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கவுசல்யாவின் தந்தை, தாய் உட்பட 11 பேரை கைது செய்தனர்.

கோவை : கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி காதல் மறுப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர் உடுமலை பேட்டையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கவுசல்யாவின் தந்தை, தாய் உட்பட 11 பேரை கைது செய்தனர். 

திருப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றது. தன்னம்பிக்கை, தளராத மனம் கொண்ட கவுசல்யா மெல்ல மெல்ல இந்தக் கொடூர தாக்குதலில் இருந்து விடுபட்டு, சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை தொடங்கி பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். 

இந்த ஆணவக் கொலையை சில சாதி சங்கங்கள் பெருமையாகவும், அவ்வாறு கொலை செய்பவர்களை சாதியின் போராளிகளாகவும் சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு சாதி சங்கங்களில் இருந்து கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமிக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. அதோடு, எவ்வித உதவிக்கும் தங்களை அணுகுமாறு அந்த சாதி சங்க உறுப்பினர்கள் அன்னலட்சுமியிடம் கூறிச் சென்றனர். மேலும், அதனை சமூக வலைத்தளங்களில் பெருமையாக பதிவு செய்துள்ளனர். பசும்பொன் தேசிய கழகத்தைச் சேர்ந்தவர்கள், கவுசல்யாவின் தந்தையான சின்னசாமி குடும்பத்திற்கு ரூ.1,26,000 வழங்கினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில், மேலும், ஒரு சாதி சங்கத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளனர். இந்த சாதி சங்கத்தைச் சேர்ந்தவர்களும் பணம் வழங்கியதை பெருமையாக பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதை ஒரு கோலாகல விழாவாகவே கொண்டாடினர் என்று கூட சொல்லி விட முடியும். 



ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இந்திய அரசிடம் வலியுறுத்தியும், கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த பின்னரும், இவ்வகையான குற்றங்களை சாதி வெறியர்கள் கவுரவமாகவே கருதி வருகின்றனர். 

திராவிடத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியமைத்துள்ள தமிழக அரசு இந்த விஷயத்தில் மவுனம் சாதிப்பது சாதி மறுப்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...