கோவை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது : தமிழிசை

கோவை மாவட்டம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாக பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாக பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் நந்தகுமார் வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், அவரது கார் பலத்த சேதமடைந்தது. இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழசை சவுந்தரராஜன், மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் எஸ்.ஆர். சேகர், மாவட்ட தலைவர் நந்தகுமார், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பா.ஜ.க., தொண்டர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதுவரை மாவட்ட தலைவர் வீட்டில் காரை எரித்த நபர்கள் யாரையும் கைது செய்யவில்லை. கடந்த 7-ம் தேதி மாவட்ட அலுவலகத்தில் தாக்கப்பட்டது குறித்து உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை. கோவை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. முதல் தாக்குதல் நடத்திய போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இது தொடர்ந்து இருக்காது. போலீசார் மேலும் காலம் தாழ்த்தினால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேருமாறு தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை," என்றார். 



Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...