கோவை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது : தமிழிசை

கோவை மாவட்டம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாக பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதாக பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் நந்தகுமார் வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், அவரது கார் பலத்த சேதமடைந்தது. இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழசை சவுந்தரராஜன், மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் எஸ்.ஆர். சேகர், மாவட்ட தலைவர் நந்தகுமார், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பா.ஜ.க., தொண்டர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதுவரை மாவட்ட தலைவர் வீட்டில் காரை எரித்த நபர்கள் யாரையும் கைது செய்யவில்லை. கடந்த 7-ம் தேதி மாவட்ட அலுவலகத்தில் தாக்கப்பட்டது குறித்து உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை. கோவை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. முதல் தாக்குதல் நடத்திய போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இது தொடர்ந்து இருக்காது. போலீசார் மேலும் காலம் தாழ்த்தினால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேருமாறு தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை," என்றார். 



Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...