சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி ஐ.நா.வில் உரையாற்றிய ஜக்கி வாசுதேவ்

சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உரையாற்றினார்.

சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உரையாற்றினார். 

நியூயார்க் நகரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் 'நிலையான வளர்ச்சிக்கு தண்ணீர்' என்னும் சர்வதேச பத்தாண்டு (2018 - 2028) செயல்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ கலந்து கொண்டார். அப்போது, உலகில் அதிவேகமாக வற்றி வரும் நதிகளுக்குப் புத்துயிரூட்டுவதற்கு மரப்போர்வையை அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 



தொடர்ந்து அவர் பேசுகையில், "அதிர்ஷ்டவசமாக, உலகின் பெரும்பாலான நதிகள் காடுகளிலிருந்து தோன்றியுள்ளதால், நம்மால் காடுகளை மீண்டும் உருவாக்க முடியும். மண்ணில் உயிர்ம-வளம் நிறைந்து, போது மானமரங்கள் இருந்தால், மண் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளும்" என்றார்.  

இதைத்தொடர்ந்து, "தண்ணீர் சம்பந்தப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு, தண்ணீருக்கான பத்தாண்டு செயல்திட்டம் வகிக்கும் பங்கு : ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை மூலம் சவால்களை சந்தித்து வாய்ப்புகளைக் கைப்பற்றுவது" குறித்த கலந்துரையாடலில் பங்கேற்க ஐ.நா. பொதுசபையின் தலைவருக்கு அவர் அழைப்பு விடுத்தார். 

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....