கால்நடை தீவன ஊழலின் 4-வது வழக்கு: லாலுவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

கால்நடை தீவன ஊழலின் 4-வது வழக்கில் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான, லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 30 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கால்நடை தீவன ஊழலின் 4-வது வழக்கில் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான, லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 30 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பீகாரில் கடந்த 1980 மற்றும் 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கால்நடை தீவனம் வாங்கியதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. போலி இரசீதுகள் கொடுத்து, அரசு கருவூலத்தில் இருந்து பணம் எடுத்து ஊழல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஐந்து வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. இந்த வழக்குகள், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தன. இந்த ஊழல் அனைத்தும், காங்கிரசின், ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின், லாலு, பீகார் முதலமைச்சர்களாக இருந்தபோது நடந்தவையாகும். இதுவரை மூன்று வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மூன்றிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தும்கா கருவூலத்தில் இருந்து ரூ. 3.13 கோடி எடுத்ததாகத் தொடரப்பட்ட நான்காவது ஊழல் வழக்கில், கடந்த 19-ம் தேதியன்று லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் அறிவித்திருந்தார். லாலுவுடன் அவரது ஊழலுக்கு உடந்தையாக இருந்த மேலும் 17 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. அதில், லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30 லட்சமும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....