தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மாவட்டத்தில் பல இடங்களில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, குற்றவாளிகளை விரைவில் பிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி உத்தரவிடப்பட்டது. 

அதன்படி, ஊட்டி ஊரக காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையில் துணை ஆய்வாளர்கள் ஆனந்தராஜ், சுந்தரன், கணபதி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அமைக்கப்பட்டு எதிரிகளைப் பல இடங்களில் தேடி கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், குற்ற வழக்கில் தொடர்புடைய கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த மணிகண்டன் (25), ஊட்டி வெல்பெக் எஸ்டேட் அண்ணாநகரைச் சேர்ந்த ராஜா (33) ஆகிய 2 பேரை கண்டுபிடித்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணைக்குப் பிறகு அவர்களிடம் இருந்து சுமார் 15 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பிடிபட்ட இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தார். அதனடிப்படையில், ஊட்டி ஊரக காவல் ஆய்வாளர் விநாயகம் தீவிர முயற்சி செய்து நேற்று இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவினை பெற்றார். பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு சார்வு செய்யப்பட்டது.



Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....