சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து

திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

திருப்பூர் : திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நெசவாளர் காலனியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. அதே பகுதியில் இரண்டு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வெள்ளியங்கிரி நேற்று இரவு தனது நண்பர்கள் இருவருடன் கார் மூலம் திருநள்ளாறு கோவில் சென்றுவிட்டு திருப்பூர் நோக்கி வந்தார். 

கார் காங்கேயம் சாலையை கடந்து வளம் பாலம் அருகே வந்துகொண்டிருந்த போது காரின் முன்புறம் உள்ள ஹெட்லைட்டில் திடீரென புகை வந்துள்ளது . இதனைக் கண்டு உடனடியாக காரை ஓட்டி வந்த வெள்ளியங்கிரி மற்றும் அவரது நண்பர்கள் அவசர அவசரமாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். 



இந்த தீ விபத்தால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. காரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...