தீ விபத்து குறித்து அவசரக் கால மீட்பு குழுவினர் நடத்திய பயிலரங்கு

கோயம்புத்தூர் அவசரக் கால மீட்புக் குழுவினர் தீ விபத்தை கையாள்வது குறித்து ஒருநாள் பயிலரங்கை நடத்தினர்.

கோவை: கோயம்புத்தூர் அவசரக் கால மீட்புக் குழுவினர் தீ விபத்தை கையாள்வது குறித்து ஒருநாள் பயிலரங்கை நடத்தினர்.

கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த பயிலரங்கில் கோயம்புத்தூர் அவசரக் கால மீட்புக் குழுவை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நான்காவது முறையாக நடைபெறும் இந்த பயிலரங்கில் வெவ்வேறு விதமான தீ விபத்துகளை கையாள்வது மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து தன்னார்வலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.



சூழலியல் ஆர்வலரான முகம்மது சலீம் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டு வனப்பரப்புகளில் தீ விபத்து ஏற்படுவதால் சூழலியல் சக்கரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று விளக்கமளித்தார்.



பி.எஸ்.ஜி. குழுமத்தின் பாதுகாப்பு அதிகாரி கலந்து கொண்டு தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறை பயிற்சிகளை தன்னார்வலர்களுக்கு அளித்தார்.



Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....