திருப்பூரில் சொத்துக்காக கணவன்-மனைவியை கொன்றவருக்கு இரட்டை ஆயுள்

சொத்து, வழிதடப் பிரச்சனை காரணமாக கணவன், மனைவியை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


திருப்பூர்: சொத்து, வழிதடப் பிரச்சனை காரணமாக கணவன், மனைவியை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

நல்லூர் கிராமம் மானூர் ரெட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, வள்ளியம்மாள் தம்பதியினர். இவர்களது தோட்டத்தின் அருகில் ரகுவரன் மற்றும் மகேஸ்வரன் என்பவர்களுக்குச் சொந்தமான நிலம் உள்ளது.

இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு இருதரப்பினரிடையே சொத்து சம்பந்தமாகவும், வழித்தடம் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதில் ராகுவரனும், மகேஸ்வரனும் சேர்ந்து பழனிச்சாமி, வள்ளியம்மாள் தம்பதியினரை கடுமையாக தாக்கி கொலை செய்தனர். இது குறித்து, திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த இருவரையும் கைது செய்தனர்.



தொடர்ந்து, வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுதே குற்றம் நிரூபிக்கப்படும் என்பதை அறிந்த மகேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், ஜாமீனில் வெளியே வந்த ரகுவரன் வழக்கில் ஆஜராகாமல் 2015-ம் ஆண்டு வரை தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளியை பிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி கூறியதை தொடர்ந்து ரகுவரன் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜாமினில் வெளிவந்த ரகுவரனுக்கு நேற்று திருப்பூர் இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, ரகுவரனுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் வழங்கப்பட்டது.



Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...