காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையில்லை: தேர்தல் ஆணையம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தடையில்லை என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தடையில்லை என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பதவிக்காலம் மே 28-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மொத்தம் 224 தொகுதிகள் கொண்டவை.அங்கு தேர்தல் நடக்கும் தேதியை ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தலைமை தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:-

கர்நாடகாவில் இன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது. ஓட்டுப்பதிவு நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரைவாக செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலைக் கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்படும். தேர்தலில் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை அறியும் வி.வி.பி.டி., எந்திரம் பயன்படுத்தப்படும். வேட்பாளர்களின் செலவீனத்தை கண்காணிக்கப் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் செலவாக ஒரு வேட்பாளர் ரூ. 28 லட்சம் வரை செலவு செய்யலாம். கன்னட மொழியிலும் வாக்குச்சீட்டு விவரங்கள் அளிக்கப்படும். வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி., கேமரா அமைக்கப்படும். மத்திய மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். என்றார். 

கடைசி நாள்: ஏப்.,24 

வேட்புமனு பரிசீலனை: ஏப்.,25

வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்.,27

ஓட்டுப்பதிவு: மே 12

ஓட்டு எண்ணிக்கை: மே15

மேலும், காவிரி மேலாண்மை வாரியத்திற்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை. இதற்கு எந்தத் தடையும் இல்லை. வாரியம் அமைப்பது தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்படாது என ராவத் கூறினார்.

Newsletter

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...