முன்னாள் ரயில்வே பாதுகாப்பு படை காவலருக்கு 3 ஆண்டு சிறை

வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 4.91 லட்சம் மோசடி செய்த முன்னாள் ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 லட்சம் இழப்பீடு தர கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை: வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 4.91 லட்சம் மோசடி செய்த முன்னாள் ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 லட்சம் இழப்பீடு தர கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை பீளமேடு பகுதியை அடுத்த ஜீவா வீதியை சேர்ந்தவர் குமார் (54). கடந்த 1989-ம் ஆண்டு வரை ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலராக பணியாற்றினார். முறையாக பணிக்கு வராததால் கடந்த 1991-ம் ஆண்டு பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இந்தியன் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து கோவையைச் சேர்ந்த 7 பேரிடமிருந்து ரூ. 4 லட்சத்து 91ஆயிரத்து 200 மோசடி செய்ததாக கடந்த 2009-ம் ஆண்டு மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், குமாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 6 லட்சத்து 36 ஆயிரத்து 800 நஷ்ட ஈடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் நீதிபதி வேலுச்சாமி உத்தரவிட்டார்.

அரசு பணியிடங்களில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்ததாக குமார் மீது ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பல்வேறு மோசடி இவர் மீது தொடரப்பட்டு கோவை 6-வது மற்றும் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...