விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள்: மே 6-ல் கோரிக்கை மாநாடு

விவசாய நிலங்கள் வழியாக உயிர்மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து ஈரோட்டில் மே 6-ம் தேதி கோரிக்கை மாநாடு நடத்தப்பட உள்ளதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூர்: விவசாய நிலங்கள் வழியாக உயிர்மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து ஈரோட்டில் மே 6-ம் தேதி கோரிக்கை மாநாடு நடத்தப்பட உள்ளதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



தமிழகத்தில் பவர்கிரிட் நிறுவனமும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து பல்வேறு உயர் மின் அழுத்த பாதை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை பெரும்பாலும் விவசாய நிலங்கள் வழியாகவே செல்வதால் உயர் மின் கோபுரம் அமைக்கப்படும் இடத்தில் 90 மீட்டர் அளவிற்கு விவசாயம் மேற்கொள்ளக் கூடாது, கிணறுகள் வெட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் மற்றும் பிரச்சனைகளை விவசாயிகள் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. 

தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், நெடுஞ்சாலை ஓரங்களில் கேபிள்களாக பதிக்க வலியுறுத்தியும், விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்தும் வரும் மே 6-ம் தேதி ஈரோட்டில் கோரிக்கை மாநாடு நடத்தப்பட உள்ளதாக திருப்பூரில் நடைபெற்ற விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...