விவசாய நிலத்தில் தண்ணீர் எடுத்ததை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல் : போலீசார் விசாரணை

திருப்பூரில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கல் குவாரிக்கு கொண்டு செல்வதைத் தட்டிக் கேட்ட விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கல் குவாரிக்கு கொண்டு செல்வதைத் தட்டிக் கேட்ட விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



 

மடத்துக்குளம் அருகே உள்ள கருப்பசாமிபுதூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து கல் குவாரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு லாரிகள் மூலமாக இரவு பகலாக தண்ணீர் எடுத்து செல்ப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த பிரச்சனையில் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்ற விவசாயி தண்ணீர் எடுத்துச் சென்ற லாரியை மடக்கி தட்டிக்கேட்டார். 

அப்போது அந்த நிலத்தின் உரிமையாளர் செல்வபேபி என்பவர் லாரி டிரைவரின் உதவியுடன் தங்கவேலையும் அவரது மகன் சின்னதிரையையும் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் சின்னதுரையின் மண்டை உடைந்தது. மேலும், தங்கவேலு-வின் தாய்க்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...