வனஉரிமை சட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக அரசு வஞ்சிக்கிறது : கேரளா ஆதிவாசி கோத்ர மகாசபா

பழங்குடியினர்களுக்கான வனஉரிமை சட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக அரசு வஞ்சிப்பதாகக் கேரளா ஆதிவாசி கோத்ர மகாசபா நிறுவன தலைவர் ஜானு தெரிவித்துள்ளார்.

நீலகிரி : பழங்குடியினர்களுக்கான வனஉரிமை சட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக அரசு வஞ்சிப்பதாகக் கேரளா ஆதிவாசி கோத்ர மகாசபா நிறுவன தலைவர் ஜானு தெரிவித்துள்ளார். 

நீலகிரி பண்டைய பழங்குடியினர் கூட்டமைப்பு சார்பில் பழங்குடியின மக்களுக்கான வாழ்வாதார உரிமைக்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் உதகை ஏ.டி.சி., சுதந்திர திடலில் நடந்தது. இதில், கேரளா ஆதிவாசி கோத்ர மகாசபா நிறுவன தலைவர் ஜானு கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியாவில் பழங்குடிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உணவு, வாழ்விடம் தேடி பழங்குடியின மக்கள் அகதிகளாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும், பல பழங்குடியின கிராமங்கள் நடைபாதை, சாலை, கழிப்பிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகின்றன. 



இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் பழங்குடியினர் மேம்பாட்டிற்கென பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், அவை முறையாகச் சென்றடைவது இல்லை. தமிழகத்திலும் பண்டைய பழங்குடிகளின் நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. வறுமை, வேலைவாய்ப்பின்மை, கல்வியின்மை போதிய குறைபாடுகள் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பழங்குடியினர்களுக்கு வனஉரிமை சட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக அரசு வஞ்சித்து வருகிறது. இந்தப் போக்கை உடனடியாக கைவிட்டு பழங்குடியினருக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்க அரசு முன்வர வேண்டும்.

மேலும், சமீபகாலமாக தென்னிந்திய பழங்குடிகளை வனங்களை விட்டு வெளியேற்றுவதற்கான சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. எங்களை அடக்குமுறை செய்யும் வனத்துறையினர், வனங்களில் சட்டவிரோதமாக காட்டேஜ்கள், விடுதிகள் போன்றவற்றை கட்ட அனுமதித்து, இயற்கை வளங்கள் சுரண்டக் காரணமாகின்றனர்," என்றார். 

இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கக்கூடிய தோடர், கோத்தர், பனியர், குரும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் மற்றும் பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும், தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...