ஊழலில் முதலிடம் எடியூரப்பா அரசுக்குதான் : அமித்ஷாவின் டங் சிலிப்பால் பதறிப்போன பா.ஜ.க.,

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க., அரசில் தான் அதிக ஊழல்கள் நடைபெற்றதாக பா.ஜ.க., தலைவர் அமித்ஷா கூறியது, பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க., அரசில் தான் அதிக ஊழல்கள் நடைபெற்றதாக பா.ஜ.க., தலைவர் அமித்ஷா கூறியது, பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் இன்று செய்தியாளர்களிடம் அமித்ஷா பேசுகையில், "சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறினார்.  அப்போது, “ஊழல் மலிந்த ஆட்சிக்குப் போட்டி வைத்தால், அதில் எடியூரப்பா அரசுக்குதான் முதலிடம் கிடைக்கும்” என்று கூறினார். இந்த சம்பவத்தில், அமித் ஷாவுக்கு அருகில்தான் எடியூரப்பா உட்கார்ந்திருந்தார்.

அமித் ஷா கூறியதைக் கேட்டதும் அவர் ஷாக் ஆகிவிட்டார். அமித் ஷாவுக்கு அருகில் இருந்த மற்றொரு தலைவர் உடனடியாக அவருக்கு தவறை சுட்டிக்காட்டினார். 

சுதாரித்துக் கொண்ட அமித்ஷா உடனடியாக மாற்றிக் கொண்டு காங்கிரஸ் அரசு என்று கூறினார்.  அமித்ஷாவின் இந்தப் பேச்சு உடனடியாக சமூகவலைதளத்தில் வைரலாகப் பரவியது. பலரும் இதனைப் பகிர்ந்தனர்.  குறிப்பாக, காங்கிரஸ் கட்சியினர் அதிக வேகமாகப் பகிர்ந்தனர். 

முதலமைச்சர் சித்தராமையாவும் இதனை விட்டுவைக்கவில்லை. அமித்ஷா பேசிய வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், ‘பொய்யை மட்டுமே பேசிவரும் அமித்ஷா இறுதியாக இன்று உண்மையைப் பேசிவிட்டார். நன்றி அமித்ஷா’ என்று குறிப்பிட்டார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...