கோவையில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம்

போக்குவரத்து விதிமீறலால் நடக்கும் விளைவுகள் குறித்து கோவையில் இன்று காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

கோவை: போக்குவரத்து விதிமீறலால் நடக்கும் விளைவுகள் குறித்து கோவையில் இன்று காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.



ஆண்டுதோறும் தமிழகத்தில் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகமாகிவருகிறது. இதனால் தமிழகத்தில் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வின் தேவை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பல்வேறு அமைப்புகள் தங்களால் இயன்ற விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே சேர்த்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இன்று கோவையில் காது கேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் அமைப்பு காவல்துறையுடன் இணைந்து சைகை மொழியில் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். அவினாசி சாலை, உப்பிலிபாளையம் சிக்னல் முன்பு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நாடகத்தில் முகமூடி வரைந்திருந்த மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நாடகத்தின் நிகழ்வு இரண்டாம் கட்டமாக ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகிலும், மூன்றாவது கட்டமாக மேட்டுப்பாளையம் சாலையிலும், நான்காவது கட்டமாக விமான நிலைய சிக்னலிலும் நடைபெறுகிறது.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மேலும், இந்நிகழ்வில் போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார் , போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இது குறித்து பெரியய்யா கூறுகையில், "காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் அதிக ஆர்வத்துடன் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசி கொண்டே வாகனத்தை இயக்குவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்றவற்றால் ஏற்படும் விளைவுகளை அருமையாக நாடகமாக நடித்துக் காட்டினர். இது நிச்சயமாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்பிக்கை உள்ளது." என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...