மானிய விலை நாற்றுக்களை பெற்று பயனடைய கோரிக்கை

மானிய விலையில் கொடுக்கப்படவுள்ள ஒரு லட்சம் நாற்றுகளை வாங்கி பயனடைய வேண்டும் என்று விவசாயிகளுக்கு தோட்டக் கலைப்பண்ணை கோரிக்கை விடுத்துள்ளது.


மேட்டுப்பாளையம்: மானிய விலையில் கொடுக்கப்படவுள்ள ஒரு லட்சம் நாற்றுகளை வாங்கி பயனடைய வேண்டும் என்று விவசாயிகளுக்கு தோட்டக் கலைப்பண்ணை கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாரில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான கல்லார் அரசு பழப்பண்ணையில் மங்குஸ்தான், ரம்பூட்டான், துரியன், பலா உள்ளிட்ட பல்வேறு விதமான பழ வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில் பொதுமக்களுக்கு சீசனுக்கு தகுந்தவாறு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் இவைகளை சார்ந்த பழ நாற்றுகள் மற்றும் குறுமிளகு, பாக்கு, தேயிலை, கருவேப்பிலை, எலுமிச்சை, ஜாதிக்காய் உள்ளிட்ட பல விதமான விவசாயிகளுக்குப் பயன்பெறும் நாற்றுகள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.



தற்போது, இந்தப் பண்ணையில் ஏற்கனவே பதியம் செய்யப்பட்டு தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் மூலம் தயார் செய்த ஒரு லட்சம் நாற்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. ஆண்டு முழுவதும் சீரான சீதோஷண நிலையில் தயாரிக்கப்படும் நாற்றும் மிக நன்கு வேகமாக வளரக் கூடியவையாகக் கருதப்படுகிறது. வெளிச்சந்தைகளை விட சுமார் 50 சதவீத மானிய விலையில் அளிக்கப்பட்டு வரும் இந்தப் பண்ணையில் பாக்கு, கருவேப்பிலை, தேயிலை, குறுமிளகு, எலுமிச்சை, ஜாதிக்காய் என 15 வகையான நாற்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. அத்துடன் பலா, மங்குஸ்தான், லிச்சி, பப்ளிமாஸ் உள்ளிட்ட பழவகை நாற்றுகளும் தயாராக உள்ளன. 

இதனை கோவை, நீலகிரி மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் வாங்கி பயனடையலாம் என தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...