குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாக புகார்: தி.மு.க., எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எம். நகரில் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாக எழுந்த புகாரையடுத்து, தி.மு.க., எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எம். நகரில் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாக எழுந்த புகாரையடுத்து, தி.மு.க., எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

மாநகராட்சியின் 74-வது வார்டு ஜி.எம். நகர் மற்றும் கோட்டை புதூர் பகுதிகளில் பொதுமக்கள் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாகப் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் ஜி.எம். நகருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதுதொடர்பாக, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும், நேரில் வரவழைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜி.எம். நகர், சாரமேடு, மஜித் காலனி பகுதிகளில் சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது தொடர்பாக ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசியுள்ளேன். செயலற்ற இந்த மாநகராட்சி நிதி இல்லாமல் தத்தளித்து கொண்டுள்ளது. ஏற்கனவே, பணிகள் செய்த ஒப்பந்ததாரர்களுக்கும் பணம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. 



மேலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மத்திய அரசின் நிதியும் பெற முடியாமல் இருக்கின்றது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களை மிரட்டிக் கட்டாயப்படுத்தி நிதி வசூல் செய்து வருகின்றது. இந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்," என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...