சம்பிரதாயமாக நடத்தப்பட்ட திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் வெளியீட்டு விழா

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின் பட்ஜெட் அறிவிப்பு நிகழ்ச்சியில் பட்ஜெட் குறித்த புத்தகத்தை வெளியிடாமல், புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் கலைந்து சென்றனர்.

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின் பட்ஜெட் அறிவிப்பு நிகழ்ச்சியில் பட்ஜெட் குறித்த புத்தகத்தை வெளியிடாமல், புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் கலைந்து சென்றனர். 



திருப்பூர் மாநகராட்சியின் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆணையர் அசோகனிடம், உதவி ஆணையரிடம் சந்தானநாராயணன் பட்ஜெட் புத்தகத்தை வழங்கினார். இதில், மூலதன வரவுகள் ரூ. 1,171 கோடி என்றும், வருவாய் மற்றும் மூலதன செலவுகள் ரூ. 1,165.67 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்ஜெட்டில் ரு. 5.87 கோடி உபரி நிதி உள்ளதாக ஆணையர் அசோகன் தெரிவித்தார். 

பட்ஜெட் அறிவிப்பு நிகழ்ச்சி இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இன்று திடீரென 11.15 மணிக்கு அழைத்து 11.20 மணிக்கு பட்ஜெட் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவித்தனர். இதனால், முழு சேகரிக்க முடியாமல் செய்தியாளர்கள் அதிருப்தியடைந்தனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் குறித்து நிதிநிலை அறிக்கை விளக்க புத்தகமானது முழு விவரமாக வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட் முழு விவர புத்தகத்தை யாருக்கும் வழங்காமல் மாநகராட்சி அதிகாரிகள் மறைத்து எடுத்து சென்று விட்டனர். அதில், உள்ள பாதகமான விஷயங்கள் வெளிவராமல் இருப்பதற்காக பட்ஜெட் புத்தகம் மறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 



நடப்பாண்டில் திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் வீட்டு வரி, உள்ளிட்ட வரியினங்கள் 400 முதல் 500 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், அதுகுறித்த விரிவான விவர அறிக்கையை தராமல் மாநகராட்சி ரகசிய பட்ஜெட்டை நூதனமாக அறிவித்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சியில் தனி அதிகாரிகள் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதால் கேட்பதற்கு ஆள் இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...