காவிரி மேலாண்மை வாரியம் அமைவதில் சந்தேகம்..? முதலமைச்சர் நாளை அவசர ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் எந்தவித முடிவும் எடுக்காததால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் எந்தவித முடிவும் எடுக்காததால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விடுத்த கெடு நாளையும் முடிவடைகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்கப் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அருண்ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை அமைப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீர்வளத்துறையின் காவிரி பங்கீடு தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சகத்திடம் மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது. இதனிடையே, காவிரி பங்கீட்டு குழுவில் எத்தனை பேர் இடம்பெறுவது, யாருக்கு என்ன அதிகாரம் என்பது தொடர்பாக தமிழகம், கர்நாடகா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

தமிழகம், கர்நாடகா இடையேயான கருத்து வேறுபாடுகளை உச்சநீதிமன்றமே தீர்க்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை, சட்ட அமைச்சகம், மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.  இதனால், இரு மாநில பிரச்னையை தீர்த்து வைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்யலாம். அவ்வாறு, மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தாமதிக்கும் பட்சத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, கெடு முடிந்த பிறகும் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை (மார்ச் 29) மாலை மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடக்க உள்ளது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...