கூட்டுறவு சங்கத் தேர்தல் அதிகாரியைக் கண்டித்து சமையல் செய்து உள்ளிருப்பு போராட்டம்

திருப்பூர் அருகே கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்புமனு பரிசீலனை செய்து பட்டியலை வெளியிடாததற்கும், அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரி வராததைக் கண்டித்தும் தி.மு.க.வினர் சமையல் செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்புமனு பரிசீலனை செய்து பட்டியலை வெளியிடாததற்கும், அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரி வராததைக் கண்டித்தும் தி.மு.க.வினர் சமையல் செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 



தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளி ஒன்றியத்திற்குட்பட்ட எண்: 414 விருமாண்டம் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கான 11 இயக்குநர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், தி.மு.க.,வினர் 4 பேரும், காங்கிரசில் 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு இருபது பேர் இறுதி செய்யப்பட்டனர். 

இந்நிலையில், இன்று காலை இறுதிவேட்பாளர் பட்டியலை வெளியிடாமலும், தேர்தல் அதிகாரி வராமல் காலம் தாழ்த்தி அ.தி.மு.க.,வினருக்கு சாதகமாக செயல்படுவதாகக் கூறி வங்கி வளாகத்திலேயே சமையல் செய்து தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...