குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது

நீலகிரி: தொடர் விடுமுறை காரணமாக இன்று முதல் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது.


நீலகிரி: தொடர் விடுமுறை காரணமாக இன்று முதல் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. அம்மாவட்டத்திற்கு நாள்தோறும் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றி உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், "மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரும் அனைத்து வாகனங்கள் குன்னூர் வழியாகவும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் செல்ல வேண்டும்.

இதைத் தவிர லாரி போன்ற வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டு பாதையிலும் அனுமதிக்கப்படாது. 

இந்த போக்குவரத்து மாற்றம் இன்று முதல் வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வரை அமலில் இருக்கும்" என்றார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...