'ஸ்கீம்' என்ற வார்த்தையால் முடங்கிக் கிடக்கும் காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உத்தரவில் "ஸ்கீம்" என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? என்ற விளக்கம் கோரி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.


காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உத்தரவில் "ஸ்கீம்" என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? என்ற விளக்கம் கோரி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த மாதம் 16-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பில், "ஸ்கீம்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. "ஸ்கீம்" என்ற வார்த்தை மேலாண்மை வாரியத்தை குறிக்கவில்லை என்றும், அது கண்காணிப்பு குழுவைத் தான் குறிக்கிறது என்றும், கர்நாடக அரசு வாதாடி வருகிறது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை எனவும் கர்நாடக அரசு கூறி வருகிறது.

ஆனால், இந்த வார்த்தை காவிரி மேலாண்மை வாரியத்தை தான் குறிக்கிறது எனவும், எனவே அதை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறி வருகிறது. "ஸ்கீம்" என்ற வார்த்தை தொடர்பாக இரு தரப்பிலும் மாறுபட்ட கருத்து நிலவுவதால், இது தொடர்பாக, அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

அப்போது, ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்யலாமா? என்று விவாதிக்கப்பட்டது. பின்னர் விளக்க மனு தாக்கல் செய்ய அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விரைவில் விளக்க மனு தாக்கல் செய்கிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...