இடியும் நிலையில் உள்ள கட்டிடத்திற்கு சீல் வைத்த கோவை மாநகராட்சி

கோவை: கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.


கோவை: கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அரசு மருத்துவமனையை ஒட்டி தனியார் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் 8 பெரிய கடைகளும், 4 சிறிய கடைகளும் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், அந்த வணிக வளாக கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், வணிக வளாக கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.



ஆறு மாதங்கள் கடந்தும் வணிக வளாகத்தில் உள்ள கடைகள் அகற்றப்படாமல் பாதுகாப்பற்ற சூழலில் கடைகள் இயங்கி வந்தது. மேலும், கட்டிடம் சேதமடைந்து இடியும் நிலையில் இருந்தது. இதனால், உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கட்டிடத்திலுள்ள எட்டு பெரிய கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர்.

இந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கும், அங்கு கடை வைத்துள்ளவர்களுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று அந்த வணிக வளாகத்தை சீல் வைக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக மூன்று உதவி ஆணையர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...