டாஸ்மாக்கில் அரசியல் தலையீட்டை நிறுத்த வலியுறுத்தி மாநாடு

டாஸ்மாக் நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அரசியல் தலையீட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கோவையில் மாநாடு நடத்தினர்.

கோவை : டாஸ்மாக் நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அரசியல் தலையீட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கோவையில் மாநாடு நடத்தினர். 



சி.ஐ.டி.யு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் 6-வது மாவட்ட மாநாடு இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, 

இதில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிலை ஆணை சட்டம் இல்லாத காரணத்தால் ஊழியர்களின் பணிமாறுதல், கடை ஆய்வு, சரக்கு கொள்முதல், உரிமம் இன்றி மதுக்கூடம் நடத்த அனுமதி என்று அதிகாரிகள் தங்களின் இஷ்டம் போல செயல்படுகின்றனர். இதனால் டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அரசுக்கும் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க உடனடியாக நிலை ஆணை உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அரசியல் தலையீட்டின் காரணமாக மதுக்கூடங்கள் முறைகேடாக செயல்படுவதால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...