வீட்டுக்குள் குவியலாக இருந்த பாம்பு குட்டிகள் : அதிர்ச்சியில் மக்கள்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகள் இந்திரா இன்று வீட்டின் பின் பக்கம் தண்ணீர் பிடிக்கச் சென்றார்.

வேலூர் : வேலூர் மாவட்டம், குடியாத்தம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகள் இந்திரா இன்று வீட்டின் பின் பக்கம் தண்ணீர் பிடிக்கச் சென்றார். அப்போது, அந்தப் பகுதியில் ஏதோ வெள்ளையாகத் தெரிந்ததால் அருகில் சென்று பார்த்திருக்கிறார். அப்போது தான் அது பாம்பு முட்டைகள் என்று தெரியவந்தது. 

மேலும், அதன் அருகிலேயே 70-க்கும் மேற்பட்ட பாம்புக் குட்டிகள் குவியலாக நெளிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக, தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் கஜேந்திரனின் வீட்டிற்குச் சென்று பாம்புக் குட்டிகளையும், முட்டைகளையும் கைப்பற்றினர். பின்னர், அந்த பாம்புக் குட்டிகளையும், முட்டைகளையும் வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.​

வீட்டில் குவியலாக இருந்த பாம்புகளை பார்த்த குடியாத்தம் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...