தடையை மீறி விற்கப்பட்ட இறைச்சியை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள்

திருப்பூர் : திருப்பூரில் மகாவீர் ஜெயந்தியன்று, தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் மகாவீர் ஜெயந்தியன்று, தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். 



மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, இறைச்சி கடைகள் மற்றும் மதுபான கடைகள் இயங்கக் கூடாது என்பது அரசு விதி. விதியை மீறி செயல்பட்ட கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், இன்று திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரம்பாளையம் பகுதியில் செயல்பட்ட இறைச்சி கடைகளின் பொருட்களை திருப்பூர் மாநகராட்சி சுகாதார துறையினர் பறிமுதல் செய்தனர். 

பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை ஏற்றிக் கொண்டு மாநகராட்சி வாகனத்தை ஒட்டுநர் ரமேஷ் ஒட்டி வந்தார். திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியில் அருகே வந்த போது, இறைச்சி கடையைச் சேர்ந்த சித்திக் என்பவர் மாநகராட்சி ஊழியர்களிடம் பொருட்களை எடுத்து வந்ததை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள், தங்களைப் பணி செய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக சித்திக் மீது திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...