காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் : பிரபலங்களின் கருத்துக்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவை பின்வருமாறு,  

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நியாயமான  தீர்வாக இருக்க முடியும். காவிரி விவகாரத்தில் நீதி கிடைக்கும் என உண்மையாக நம்புகிறேன். என்றார்.

துரைமுருகன் (தி.மு.க.,): காவிரி விவகாரத்தில் கடைசி நேரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி என்ன ஆகப்போகிறது..? இவ்வாறு கூறினார்.  

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் : காவிரி விவகாரத்தில் மத்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். என்றார்.  

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் : கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை. தீர்ப்பின் முக்கிய பகுதிகளில் ஸ்கீம் என்றுதான் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தமிழக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு 100% பாஜக அரசு உறுதுணையாக இருக்கும். எனத் தெரிவித்தார். 

குமார், அருண்மொழித்தேவன் (அ.தி.மு.க., எம்.பி.க்கள்) : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா செய்வோம். இவ்வாறு கூறினர்.

 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் : காவிரி விவகாரத்தில், ஓட்டு வேட்டைக்காக அரசியல் செய்ய வேண்டாம். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். என்றார். 

கவிஞர் வைரமுத்து : உச்சநீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது. உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகி விடும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு அமைக்க உச்சநீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் கூறினார்.  

பழ. நெடுமாறன் : தமிழகத்துக்கான காவிரி நீரை பெற்றுத் தருவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. என்றார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் : ஆசியாவின் மிகப்பெரிய சமவெளிப் பகுதிகளுள் ஒன்று காவிரி டெல்டா. அது அழிவது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே கேடு. எனக் குறிப்பிட்டார்.  

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது. கண்காணிப்புக்குழு வேண்டுமானால் அமைக்கலாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு மத்திய பா.ஜ.க., அரசுதான். என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...