ரூ. 20 லட்சம் மதிப்பிலான இலவச கழிப்பறைகளை பயனாளிகளுக்கு வழங்கிய மார்ட்டின் அறக்கட்டளை

கோவை : கோவையில் மார்ட்டின் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான கழிப்பறைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

கோவை : கோவையில் மார்ட்டின் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான கழிப்பறைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. 

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி பல்வேறு அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளின் உதவியுடன் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக திறந்தவெளி மலம் கழித்தல் இல்லா பகுதியாக துடியலூர் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளை மாற்றும் நடவடிக்கையாக மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டன. கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப்பின் உதவியுடன் சுமார் ரூ. 20 லட்சம் செலவில் இந்தக் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன.



இந்த நிலையில், இந்த இலவச கழிப்பறைகளை 165 பயனாளிகளுக்கு மார்ட்டின் அறக்கட்டளையின் அறங்காவலர் லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், "ஏழை, எளியவர்களுக்கு இலவச கழிப்பறைகளை கொடுக்க வேண்டும் என்பது தனது கணவரின் நீண்ட நாள் கனவு. இதற்காக, அவர் ரூ. 5 லட்சம் தருவதாக கூறினார். ஆனால், தற்போது, ரூ. 20 லட்சம் செலவில் இந்தக் கழிப்பறைகளை கட்ட நிதியளித்துள்ளார். சமுதாயத்தில் நலிவடைந்தவர்கள் மற்றும் ஏழை, எளியவர்களுக்கு உதவுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார்," என்றார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...