இந்திய அணிக்கு தேர்வாகும் வகையில் தமிழகத்தில் சிறந்த பயிற்சி முகாம்கள் : தமிழக கிரிக்கெட் வீரர் சதீஷ்

கோவை : தமிழகத்திலிருந்து மேலும் பல வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகும் வகையில், பயிற்சி முகாம்கள் திறம்பட செயல்படுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை : தமிழகத்திலிருந்து மேலும் பல வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகும் வகையில், பயிற்சி முகாம்கள் திறம்பட செயல்படுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ் கோவையில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் தமிழக வீரர்களின் ஆதிக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கிரிக்கெட்டில் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாக, சர்வதேச அளவிலான கிரிக்கெட் பயிற்சி முகாம் கோவையில் தொடங்கப்பட்டது. இதற்கான விழா கோவைப்புதூரில் உள்ள தனியார் அகாடமி மையத்தில் நடைபெற்றது. கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் பங்கேற்று பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். 

இவ்விழாவில், தமிழக கிரிக்கெட் அணியின் வீரர்கள் அருண் கார்த்திக் மற்றும் ராஜகோபால் சதீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர்கள், தற்போது இந்திய பெண்கள் அணி கிரிக்கெட் வீராங்கனைகளும், உலக அளவில் சாதித்து வருகின்றனர். மாணவியரும் அதிக அளவில் கிரிக்கெட் பயிற்சி முகாமில் ஈடுபட்டு, தங்கள் விளையாட்டு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனக் கேட்டுக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் சதீஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் திறம்பட செயல்படுகின்றன. இதனால், இந்திய கிரிக்கெட் அணிக்காக மேலும் பல தமிழக வீரர்கள் விளையாட வாய்ப்புள்ளது," என்றார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...