திருப்பத்தூர் ரயில்நிலையம் அருகே மின்கம்பி முறிவால் ரயில்சேவை பாதிப்பு

திருப்பத்தூர் - காகங்கரை இடையிலான ரயில்பாதையில் உள்ள மின்கம்பி முறிவால், ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் - காகங்கரை இடையிலான ரயில்பாதையில் உள்ள மின்கம்பி முறிவால், ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பத்தூர் மற்றும் காகங்கரை இடையே உள்ள ரயில்பாதையில் மின்கம்பி முறிந்து விழுந்துள்ளது. இதனால், சேலம் ஜோலார்பேட்டை பிரிவில் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மதுரை - சென்னை டுரன்டோ எக்ஸ்பிரஸ் (22206), திருவனந்தபுரம் - சென்னை மெயில் (12624) ஆகிய ரயில்கள் காகங்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மங்களூரூ - சென்னை எக்ஸ்பிரஸ் (12686) சாமல்பட்டியிலும், எர்ணாகுளம் - சென்னை சிறப்பு ரயில் தோடம்பட்டியிலும், கொச்சுவெளி - பெங்களூரூ எக்ஸ்பிரஸ் மொரப்பூரிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, திருவனந்தபுரம், ஷாலிமார் எக்ஸ்பிரஸ் (22641) லோகூரிலும், திருவனந்தபுரம் - சென்னை எக்ஸ்பிரஸ் (12696) கருப்புவிலும், எர்ணாகுளம் - ஐதராபாத் சிறப்பு எக்ஸ்பிரஸ் (07118) பொம்மிடியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அறுந்து விழுந்துள்ள மின்கம்பியை சீரமைக்கும் பணி முடிய சுமார் 2 மணி ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோளாறு காரணமாக ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...