பராமரிப்பின்றி கிடக்கும் 'சூழல் சுற்றுலா' பகுதி: சீரமைக்கச் சுற்றுலா பயணிகள் கோரிக்கை

நீலகிரி: கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரியில் பராமரிப்பின்றி கிடக்கும் சூழல் சுற்றுலா பகுதியை முறையாக பராமரித்து, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரியில் பராமரிப்பின்றி கிடக்கும் சூழல் சுற்றுலா பகுதியை முறையாக பராமரித்து, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் 'சூழல் சுற்றுலா' என்ற பெயரில் வனப்பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் வனத்துறை சார்பில் சுற்றுலாத்தலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேர்ன்ஹில் வனப்பகுதியில் தொங்கு பாலம், வனவிலங்குகளான சிறுத்தை, புலி, மான், கரடி, நாகபாம்பு, மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் வாழும் வரையாடுகள் போன்றவை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக தத்ரூபமாக பாடம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய விளம்பரம் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வருகை கேர்ன்ஹில் வனப்பகுதியில் குறைவாகவே உள்ளது. இதனால், இங்கு வைக்கப்பட்டுள்ள வனவிலங்குகளின் மாதிரி உருவங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. மேலும், வனப்பகுதி நடுவே அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் கம்பிகள் மற்றும் பாதைக்காக அமைக்கப்பட்டுள்ள பலகைகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், இங்கு வரும் ஒரு சில சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.



இதேபோல, வனத்துறை அதிகாரியின் அலுவலகமும் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



எனவே கோடை சீசனுக்குள் சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய விளம்பர செய்து இங்கு வைக்கப்பட்டுள்ள வனவிலங்குகளின் உருவங்கள் மற்றும் தொங்கு பாலத்தை உடனடியாக சீரமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேன்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...