மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை தாக்கியதில் 6 ஆடுகள் பலி

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆடுகளை சிறுத்தை தாக்கிக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆடுகளை சிறுத்தை தாக்கிக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். 

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் அண்மைக் காலமாக வனவிலங்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. 



இந்நிலையில், நேற்று நள்ளிரவு மேடூர் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை சிவக்குமார் என்பவரது தோட்டத்தினுள் நுழைந்துள்ளது. அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை சிறுத்தை தாக்கி உள்ளது. மொத்தம் ஆறு ஆடுகளை கழுத்து பகுதியில் கடித்து குதறிவிட்டு, சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியது. ஆடுகளின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் ஆடுகள் துடிதுடித்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காரமடை வனத்துறையினர் ஆடுகள் உயிரிழப்புக்கு காரணம் சிறுத்தையா அல்லது வேறு விலங்குகளாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது :- சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தால் நாங்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளோம். கால்நடைகளை வளர்க்க முடியவில்லை. வனவிலங்குகளால் ஏற்படும் இழப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். மேலும், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை வேண்டும். என்றனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...