திருப்பூர் எம்.பி. சத்யபாமாவை கொலை செய்ய முயற்சி : கணவர் கைது

திருப்பூர்: திருப்பூர் எம்.பி. சத்யபாமாவை கொலை செய்ய முயற்சி : கணவர் கைது

திருப்பூர்: திருப்பூர் எம்.பி.சத்யபாமாவை கொலை செய்ய முயற்சித்ததாக அவரது கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகரில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா (45) வசித்து வருகிறார். திருப்பூர் மக்களவை தொகுதி எம்.பி.யான இவருக்கும், கணவர் வாசுவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சத்யபாமாவை, அவரது கணவர் வாசு கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக சத்யபாமாவின் சகோதரர் சண்முகபிரபு கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் சத்யபாமாவின் கணவர் வாசு மீது கொலை முயற்சி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சத்யபாமாவுக்கும், வாசுவுக்கும் 1990ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கணவர் வாசு, சத்யபாமாவை கொலை செய்ய முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...