தனியார் நூற்பாலையில் தீவிபத்து : பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் நாசம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.

பல்லடத்தை அடுத்த வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் செந்தில்குமார் (58) என்பவருக்கு சொந்தமான அதிநவீன நூற்பாலை இயங்கி வருகிறது. இதில், வடமாநில மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் பலரும் பணியில் இருந்த போது, ஆலையில் உள்ள இயந்திரத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், தொழிலாளர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பல்லடம் தீயணைப்புத் துறையினர் தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் நீரைப் பீய்ச்சிடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான அதிநவீன இயந்திரங்கள் மற்றும் கட்டிடமும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...