குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் சேவை இன்று தொடக்கம்

மேட்டுப்பாளையம்: கோடை சீசனையொட்டி குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான சிறப்பு ரயில் இன்று முதல் தொடங்கியது.


மேட்டுப்பாளையம்: கோடை சீசனையொட்டி குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான சிறப்பு ரயில் இன்று முதல் தொடங்கியது. 



சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று நடப்பாண்டின் கோடை சீசனுக்கு, சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று (மார்ச் 31) முதல் ஜூன் 26-ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும், மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கூட்டம் காரணமாக வழக்கமாக செல்லும் மலை ரயிலில் பயணச்சீட்டு கிடைக்காமல் ஏமாற்றமடைந்திருந்த சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆன்லைன் முன்பதிவு மூலம் இந்த கூடுதல் மலை ரயிலின் டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன. இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தபடி இன்று முதல் கோடைக்கால சிறப்பு மலைரயில் சேவை துவங்கியது.



மேட்டுப்பாளையத்தில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு 12.30 மணியளவில் குன்னூர் வந்தடையும். பின்னர், குன்னூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.20 மணிக்கு சென்றடையும் வகையில் இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன் பதிவு கடந்த 14-ம் தேதியிலிருந்து துவங்கியது. முதல் இரு பெட்டிகளில் 16 மற்றும் 36 இருக்கைகள் கொண்ட முதல், இரண்டாம் வகுப்புகள் உள்ளன. 3-வது பெட்டியில் 28 இருக்கைகள் கொண்ட இரண்டாம் வகுப்பு என மொத்தம் 132 இருக்கைகள் உள்ளன. 



இந்தச் சிறப்பு ரயில் பயணத்தை மறக்கமுடியாத தருணமாக ஏற்படுத்த, பயணிகள் அனைவருக்கும் சமோசா, நீலகிரி தேநீர், பழரசம், தண்ணீர் பாட்டில் போன்ற சிற்றுண்டிகள் மற்றும் பானங்களுடன் நீலகிரி தைலம் கொண்ட ஒரு பாட்டில், டான்டீயின் தயாரிப்பான நீலகிரி தேயிலைப் பொட்டலம், நீலகிரி பாரம்பரிய ரயில் சேவை பற்றிய ஒரு சிறு கையேடு, ஒரு சாவிக் கொத்து மற்றும் அவற்றை எடுத்துச் செல்ல ரயில்வே முத்திரை கொண்ட ஒரு பை போன்றவற்றை நினைவுப் பரிசாக வழங்க சேலம் ரயில்வே கோட்டம் ஏற்பாடு செய்துள்ளது.



 

இந்தச் சிறப்பு ரயில்களுக்கான கட்டண விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 

முதல் வகுப்பு : 

மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs.1,100/- 

குன்னூர் - மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs.1,100/- 

இரண்டாம் வகுப்பு : 

மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs.800/- 

குன்னூர் - மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs.800/- 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...