உதகையில் நூற்றாண்டை கடந்த குதிரை பந்தயம் நடப்பதில் சிக்கல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற இருந்த புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் குதிரை பந்தய ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற இருந்த புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் குதிரை பந்தய ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உதகையில் கோடை சீசனில் துவங்கும் குதிரை பந்தயமானது தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ல் தொடங்கும். இதில், பெங்களூரு, மைசூரு, சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களிலிருந்து சுமார் 600 குதிரைகளும், 20 பயிற்சியாளர்களும், 50 க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பிற ஊழியர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான 132-ம் ஆண்டு குதிரை பந்தயம் நடத்துவதற்கான ஓடுதளம், குதிரைகளுக்கான குடில்கள், ஊழியர்கள் தங்குவதற்கான இடங்கள் ஆகியவை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், சங்க உட் பிரச்சனைகளால் ஏப்ரல் 14ல் துவங்கும் குதிரை பந்தயத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உதகையில் உள்ள குதிரை பந்தய ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த குதிரை பந்தயம் தள்ளிப்போவதால் உள்ளுர் மக்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...