மதநீர் சுரந்ததால் கும்கி யானைகள் முகாம்களுக்கு திரும்புவதில் தாமதம்

கோவை: கோவை மாவட்டம் சாடிவாயல் யானைகள் முகாமில் பயிற்சி பெற்று வந்த இரு கும்கி யானைகள் அதன் இருப்பிடத்திற்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் சாடிவாயல் யானைகள் முகாமில் பயிற்சி பெற்று வந்த இரு கும்கி யானைகள் அதன் இருப்பிடத்திற்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக பாரி (37), சுஜய் (45) ஆகிய யானைகள் கும்கிளாக தங்களது சேவையைச் செய்துள்ளன. இதைத் தொடர்ந்து, இரு யானைகளும் ஆனைமலை மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே, கோவை மாவட்டம் சாடிவயலில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமில் பாரி மற்றும் சுஜய் உள்ளிட்ட பல்வேறு யானைகள் கலந்து கொண்டன. 48 நாட்கள் பயிற்சி முகாம் கடந்த புதன்கிழமையே முடிவடைந்தது. இதில், கலந்து கொண்ட யானைகள், அவற்றின் இருப்பிடத்திற்கு திரும்பிய நிலையில், நேற்று கும்கி யானை பாரி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது, பாரிக்கு மதநீர் திடீரென சுரந்தது. இதனால், அந்த யானை காப்பகத்திலேயே தங்க வைக்கப்பட்டது. மேலும், கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பிறகே, அதன் காப்பகத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்றொரு கும்கி யானையான சுஜய் இன்று தேக்கம்பபட்டி முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையே, சாடிவயலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு கும்கி யானைகளுக்கு பதிலாக முதுமலையில் இருந்து சேரன் மற்றும் ஜான் ஆகிய கும்கி யானைகள் பதிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...