பரோல் முடிவதற்கு முன்பே சிறைக்கு திரும்பினார் சசிகலா

கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் வந்திருந்த சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு மீண்டும் திரும்பினார்.

கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் வந்திருந்த சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு மீண்டும் திரும்பினார்.

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம. நடராஜன் கடந்த 19-ந்தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் உடல்நல குறைவால் காலமானார். இதையடுத்து, கணவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சிறை நிர்வாகத்திடம் சசிகலா பரோல் கோரினார்.  அவருக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அவர் சிறையில் இருந்து கடந்த 20-ந்தேதி தஞ்சாவூருக்கு புறப்பட்டார். அங்கு கணவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

சசிகலா பரோலில் வந்து 10 நாட்கள் ஆன நிலையில், இன்று தஞ்சாவூரில் இருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு கார் மூலமாக புறப்பட்டுச் சென்றார். சசிகலாவுடன் தஞ்சாவூரில் இருந்து பெங்களூரு வரை டி.டி.வி. தினகரனும் உடன் சென்றார். சுமார் 4 மணியளவில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு திரும்பினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...