ராமகிருஷ்ணா மில்ஸ் டி20 போட்டி: காஸ்மோ வில்லேஜ் அணி சாம்பியன்

கோவை: கோவை மாவட்ட கிரிகெட் சங்கம் சார்பில் ராமகிருஷ்ணா மில்ஸ் டி20 போட்டியில் காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி வெற்றி பெற்றது.

கோவை: கோவை மாவட்ட கிரிகெட் சங்கம் சார்பில் ராமகிருஷ்ணா மில்ஸ் டி20 போட்டியில் காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி வெற்றி பெற்றது.

கோவை கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ராமகிருஷ்ணா மில்ஸ் டி20 போட்டிகள் நடைபெற்றது. பி.எஸ்.ஜி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் கோவை நைட்ஸ் அணி, காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் ஆடிய கோவை நைட்ஸ் அணி 19.3 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் அணியை எதிர்த்து டெவில் ஸ்டோரகர்ஸ் அணி விளையாடியது. முதலில் ஆடிய ஜாலி ரோவர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெவில் ஸ்டோரகர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இறுதியில், தொடரின் சிறந்த பேட்ஸ்மென் விருது காஸ்மோ வில்லேஜ் அணியின் வீரர் சுகேந்திரனுக்கும், சிறந்த பந்து வீச்சாளருக்கான விருது டெவில் ஸ்டோரகர்ஸ் அணி வீரர் முருகானந்தத்திற்கும் வழங்கப்பட்டது. இதேபோல, காஸ்மோ வில்லேஜ் அணியின் வீரர் சரத்குமார் சிறந்த ஆல் ரவுண்டருக்கான விருதையும், சக அணி வீரர் சரவணனுக்கு சிறந்த விக்கெட் கீப்பருக்கான விருதையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பையை ரத்தினம் கல்லூரி முதன்மை அதிகாரி மாணிக்கம் வழங்கினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...