திருநங்கைகளுக்கு ஆட்டோக்களை வழங்கிய கோவை மாநகர போலீஸ்

கோவை: திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு, 4 திருநங்கைகளுக்கு இலவச ஆட்டோக்களை கோவை மாநகர ஆணையர் பெரியய்யா வழங்கினர்.


கோவை: திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு, 4 திருநங்கைகளுக்கு இலவச ஆட்டோக்களை கோவை மாநகர ஆணையர் பெரியய்யா வழங்கினார்.

ஆண்டுதோறும் மார்ச் 31-ம் தேதி சர்வதேச திருநங்கைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு கோவை மாநகர போலீசார் மற்றும் தனியார் டிரஸ்ட் இணைந்து திருநங்கைகளுக்கு உதவிகளும், தொழில் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை சாய்பாபா காலனி பகுதியில் இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா திருநங்கைகள் 4 பேருக்கு ஆட்டோக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.



பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது ஓரு முன்னுதாரணமான நிகழ்ச்சி. திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது. காவல்துறையில் மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் பாலினத்தவருக்கு மரியாதையான வேலைகள் வழங்கவும், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் செய்தல் போன்றவற்றில் ஈடுபடாமல் ஆட்டோ ஓட்டி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும். தனியார் நிறுவனங்களும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்க முன்வரவேண்டும். மூன்றாம் பாலினத்தவர் மீதான சமூகத்தின் பார்வை மாறி வருகிறது", எனத் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...