ஈஷா யோகா மையத்தின் ஆதி யோகி சிலை இந்திய சுற்றுலாத் தலமாக அறிவிப்பு

கோவை : ஈஷா யோகா மையத்திலுள்ள ஆதியோகியின் 112-அடி சிலையை, “Incredible India” சுற்றுலாத் தலமாக, இந்திய சுற்றுலா துறை அறிவித்துள்ளது.

கோவை : ஈஷா யோகா மையத்திலுள்ள ஆதியோகியின் 112-அடி சிலையை, “Incredible India” சுற்றுலாத் தலமாக, இந்திய சுற்றுலா துறை அறிவித்துள்ளது.



கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. அங்குள்ள சிவலிங்க தியான பீடம் மிகவும் பிரசித்திபெற்றது. ஆண்டுதோறும் அங்கு நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்வில் நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு மக்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது அங்கு 112-அடி உயரத்தில் ஆதியோகியின் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

'காட்டை அழித்து கட்டப்பட்டது தான் இந்த சிலை' என்றும், 'ஜாக்கி வாசுதேவின் உருவமே ஆதியோகி சிலை' என்றும் சிலை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது. 

இந்த நிலையில் ஆதி யோகி சிலை உலகின் மிகப் பெரிய மார்பளவு சிலை என, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. தற்போது, இந்த சிலையை 'Incredible India' சுற்றுலாத் தலமாக, இந்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...