பா.ஜ.க. அரசு ஆன்மீக அரசியலையோ, தேசிய அரசியலையோ நடத்தவில்லை : அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

திருப்பூர் : மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஆன்மீக அரசியலையோ அல்லது தேசிய அரசியலையோ நடத்தவில்லை என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.


திருப்பூர் : மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஆன்மீக அரசியலையோ அல்லது தேசிய அரசியலையோ நடத்தவில்லை என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். 

இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில இணைய தாழ் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் எதிரில் உள்ள சங்கமம் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை தாங்கிய அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். 



அப்போது அவர் பேசுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசும், கர்நாடக அரசும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்துவிட்டது. எனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். மேலும், மத்திய அரசு ஆன்மீக அரசியலையும் நடத்தவில்லை, தேசிய அரசியலையும் நடத்தவில்லை. ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். 234 தொகுதிகளிலும் ரஜினி வெற்றி பெறுவார். ஆன்மீக அரசியல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வரும் சித்திரை மாதம் அனைத்து மாவட்டங்களிலும் ராம்ராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படும். 

மேலும், நியூட்ரினோ மற்றும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆதரித்துக் கூறிய கருத்தை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மாற்றிக் கூறிவருகின்றார்." என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...