வால்பாறை பகுதியில் மழை : அருவிகளில் நீரை கண்ட சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

வால்பாறை : வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலாப் சென்ற பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறை : வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலாப் சென்ற பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



கோடை சீசன் தொடங்கிவிட்ட காரணத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலாப் செல்லத் தொடங்கியுள்ளனர். நிலவிவரும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிப் பிழைத்தார் போல, சுற்றுலாப் பயணிகள் மலைப் பிரதேசங்களுக்கு சென்று இளைப்பாறி வருகின்றனர். 

அதோடு, கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் வால்பாறை மற்றும் உதகை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. குழு-குழுவென இருந்த வால்பாறையில் நேற்று லேசான மழை பெய்தது. கோடையின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பெய்த இந்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். 



தொடர்ந்து, இன்றும் அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் ஆங்காங்கே உள்ள சிறு அருவிகளில், நீர் வழிந்தோடத் தொடங்கியுள்ளது. இது அங்கு சுற்றுலாப் சென்ற பயணிகளை குதூகலமடையச் செய்துள்ளது. தற்போது அந்த அருவிகளில் வழிந்தோடும் நீரில் விளையாடி இன்பச் சுற்றுலாவாக கொண்டாடி வருகின்றனர் சுற்றுலாப் பயணிகள். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...